NATIONAL

கோவிட்-19: சிலாங்கூரி 6 புதிய சம்பவங்கள் !!!

26 ஏப்ரல் 2020, 1:07 PM
கோவிட்-19: சிலாங்கூரி 6 புதிய சம்பவங்கள் !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 27:

நேற்று நண்பகல் 12 மணி வரை மலேசியாவில் 38 புதிய கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ள வேளையில் சிலாங்கூரில் மட்டும் ஆறு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். மிக அதிகமான சம்பவங்கள் ஏற்பட்ட மாநிலமாக கோலா லம்பூர், அதாவது 16 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சரவாக்கில் ஏழு மற்றும் ஜொகூரில் ஆறும் பதிவாகியுள்ளன என்று அவர் விவரித்தார்.

பினாங்கு மாநிலத்தில் இரண்டு புதிய சம்பவங்களும், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் புத்ராஜெயா ஆகியவை தலா ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பெர்லிஸ், கெடா, பேராக், பஹாங், கிளந்தான், திரெங்கானு, சபா மற்றும் லாபுவான் மாநிலங்களில் எந்த ஒரு சம்பவமும் ஏற்படவில்லை என்று நூர் ஹிஸாம் கூறினார்.

சிலாங்கூர் மாநிலம் இது வரை  1,394 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்துள்ள நிலையில் கோலா லம்பூர் (1,170), ஜொகூர் (659) மற்றும் லாபுவான் (16) மலேசியாவிலே மிகக் குறைந்த கோவிட்-19 நோய் சம்பவங்களை பதிவு செய்துள்ளது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.