NATIONAL

கோவிட்-19 நோய் பாதிப்பில்லாத பகுதி மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள்;பிகேபியை கடைபிடிக்க வேண்டும் !!!

25 ஏப்ரல் 2020, 9:51 AM
கோவிட்-19 நோய் பாதிப்பில்லாத பகுதி மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள்;பிகேபியை கடைபிடிக்க வேண்டும் !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 25:

பச்சை மண்டலத்தில் இருக்கும் பொது மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் கோவிட்-19 நோய் சம்பவங்கள் இல்லை என்று அலட்சியமாக நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் இருக்கும் அணுகுமுறையைக் கண்டு  மலேசிய சுகாதார அமைச்சு கவலை கொள்வதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். பொது மக்களில் பலர் கோவிட்-19 தொற்று நோய் தாக்குதல் நின்று விட்டது போன்ற தோற்றத்தில் உள்ளனர், ஆனால் இன்னும் இந்நோய் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருவதாகவும், இறுதி வரை போராட வேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

" ஆகவே, பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதி மக்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். நடமாடும் கட்டுப்பாடு ஆணையை பின்பற்றி நடக்க வேண்டும். சுகாதார அமைச்சு அனைத்து பொது மக்களையும் கோவிட்-19 தொற்று நோயை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். இந்த வைரஸ் நாம் அனைவரின் எதிரி ஆகும், இருந்தாலும் நாம் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் கோவிட்-19 தாக்கத்தை நாம் எதிர் கொள்ள முடியாது," என்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு நூர் ஹிஸாம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.