NATIONAL

பிகேபி: பிளஸ் நிறுவனம் நெடுஞ்சாலை பயன்படுத்துவோர் பாதுகாப்பை உறுதி செய்யும் !!!

25 ஏப்ரல் 2020, 9:44 AM
பிகேபி: பிளஸ் நிறுவனம் நெடுஞ்சாலை பயன்படுத்துவோர் பாதுகாப்பை உறுதி செய்யும் !!!

கோலா லம்பூர், ஏப்ரல் 25:

மலேசிய மக்கள் நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) நான்காவது கட்டத்தில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில், பிளஸ் நிறுவனம் தங்களது நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் பயனர்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்கும் என உறுதி அளித்தது.அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிக் கொண்டு செல்லும் வாகனங்கள் அல்லது அரசாங்கம் நிர்ணயித்தபடி  தங்களது ஊர்களுக்கு திரும்பும் பொது மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை பிளஸ் நிறுவனம் தனது உத்தரவாதத்தை அளிப்பதாக இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ அஸ்மான் இஸ்மாயில் கூறினார்.

நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பிளஸ்ரோந்தா 24 மணி நேரச் சேவையை வழங்கும் எனவும் சாலை போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கும் குழுவினரும், எல்லா வாகனமோட்டிகளும்  பாதுகாப்பாக இருக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

" கோவிட்-19 தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையில் அரசாங்கம் எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் பிளஸ் நிறுவனம் ஒத்துழைப்பை வழங்கும். சமூக இடைவெளி மற்றும் சுய சுகாதாரத்தை பேணுதல் ஆகியவற்றை அமல்படுத்தியிருக்கும் அரசாங்கத்தின் வழிமுறைகளை நெடுஞ்சாலை பயனர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.