NATIONAL

100,000 அடைபட்டுக் கிடக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி !!!

23 ஏப்ரல் 2020, 12:34 PM
100,000 அடைபட்டுக் கிடக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் வீடு திரும்ப அனுமதி !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 23:

பல்கலைக் கழக தங்கும் விடுதியில் அடைப்பட்டு இருக்கும் சுமார் 1 லட்சம் உயர்கல்வி மாணவர்கள் கூடிய விரைவில்  தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் இன்று தொலைக்காட்சி நேரலை சிறப்பு ஒளிபரப்பில் அறிவித்துள்ளார். சுகாதார அமைச்சு தற்போது மாணவர்களை கொண்டு செல்லும் வழிமுறைகளை ஆராய்ந்து   வருகிறது என பிரதமர் தெரிவித்தார்.

" நாம் தொடர்ந்து மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும் நடவடிக்கையை திட்டமிட வேண்டும். எந்த ஒரு நோய் பரவும் ஆபத்தும் ஏற்படக்கூடாது. வீடு திரும்பும் முன்பாக மாணவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கோவிட்-19 நோய் அவர்களுக்கு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று பிரதமர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.