NATIONAL

செர்டாங் விவசாய கண்காட்சி பூங்கா தனிமைப்படுத்தும் மையத்தில் 12 கோவிட் நோயாளிகள் அனுமதி

23 ஏப்ரல் 2020, 7:14 AM
செர்டாங் விவசாய கண்காட்சி பூங்கா தனிமைப்படுத்தும் மையத்தில்  12 கோவிட் நோயாளிகள் அனுமதி

செர்டாங், ஏப். 23-

இங்குள்ள செர்டாங் மலேசிய விவசாய கண்காட்சி பூங்கா (மேப்ஸ்) தனிமைப்படுத்தும் மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எவ்வித அறிகுறியும் கொண்டிராத 12 கோவிட் 19- நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கு சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவிட் - 19 மருத்துவமனைகளின் நோயாளிகள் தொடர்பில் பெறப்படும் தகவல்கள் அடிப்படையில் இந்நோயாளிகள் எண்ணிக்கை அமைந்திருப்பதாக இதன் இயக்குநர் டாக்டர் முகமது அனுவார் அப்துல் சாமாட் @மாமுட் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில், சிரம்பான் மற்றும் ரெம்பாவ் போன்ற மருத்துவமனைகளில் இருந்தும் தாங்கள் கருத்துகளைப் பெற்றதாக அவர் சொன்னார்.

கோவிட் - 19 அறிகுறிகளைக் கொண்ட மற்றும் குறைந்த அறிகுறிகளைக் கொண்டவர்களை இந்த மையத்தில் அனுமதிப்பது குறித்தும் கருத்துகள் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.

சுங்கை பூலோ மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகளும் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்படலாம் என்றார் முகமது அனுவார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.