NATIONAL

பிகேபி நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய சந்தை தொடரும்!

10 ஏப்ரல் 2020, 5:49 AM
பிகேபி நடைமுறைகளைப் பின்பற்றி விவசாய சந்தை தொடரும்!

ஷா ஆலம், ஏப்.10-

சிலாங்கூரில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கப்பட்டது முதல் 2 மில்லியன் ரிங்கிட் விற்பனையைப் பதிவு செய்துள்ள விவசாய சந்தையை மாநில அரசு தொடரும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். தொடரப்படும் இச்சந்தை நடமாட்டு கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) நடைமுறைகளைப் பின் பற்றும் என்றார் அவர்.

நல்லதொரு வருவாயை ஈட்டியிருக்கும் இச்சந்தை நடவடிக்கையின் போது சமூக இடைவெளி போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படும் என்று இங்குள்ள கோவிட்-10 நடவடிக்கை அறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விநியோகம் மூலம் விற்கப்படாமல் குவிந்த பசுமையான பொருட்களை விற்றுத் தீர்க்கும் நோக்கத்தில் இந்த சந்தை மாநிலம் முழுவதிலும் 9 இடங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

1. டெங்கில் ஃபாமா நடவடிக்கை மையம்,

2. பூச்சோங் ஃபாமா நடவடிக்கை மையம்,

3. சபாக் பெர்ணம் ஃபாமா நடவடிக்கை மையம்,

4. செலாயாங் ஃபாமா மொத்த சந்தை,

5  புத்ராஜெயா ஃபாமா மையம்,

6. ஷா ஆலம் செக்சன் 13 ஹோலிஸ்மோக்,

7. பெட்டாலிங் ஜெயா மேட் அபவுட் கேக்,

8. ஷா ஆலம் செக்சன் 19 மாக் ஊடா ஆகிய இடங்களில் இச்சந்தைகள் தோற்றுவிக்கப்பட்டுளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.