NATIONAL

ஏப்ரல் 6 தொடங்கி பிபிஎன் கட்டம் கட்டமாக வழங்கப்படும் !!!

4 ஏப்ரல் 2020, 6:39 AM
ஏப்ரல் 6 தொடங்கி பிபிஎன் கட்டம் கட்டமாக வழங்கப்படும் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 4:

தேசிய பரிவு மிக்க உதவி நிதி (பிபிஎன்) எதிர் வரும் ஏப்ரல் 6 தொடங்கி கட்டம் கட்டமாக தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்தார். முதல் கட்டமாக 8.3 மில்லியன் தகுதி பெற்றவர்களுக்கு ரிம 5.63 மில்லியனை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.

" பேங்க் சிம்பானான் நேசனல் (பிஎஸ்என்) மற்றும் உள்நாட்டு வருவாய்த்துறை வாரியம் (எல்எச்டிஎன்) ஆகியவற்றின் ஒத்துழைப்போடு பொது மக்கள் கூடிய விரைவில் இந்த உதவி நிதியை பெறுவார்கள். சில சந்தர்ப்பவாதிகள் சூழ்நிலையை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருவதை கண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என தெங்கு கேட்டுக் கொண்டார்.

பிபிஎன் புதிய விண்ணப்பங்கள் அல்லது மேல் முறையீடு ஆகியவை ஏப்ரல் கடைசி வரை செய்யலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.