NATIONAL

வீட்டில் அமைதியாக இருங்கள்; நோய் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் - நூர் ஹிஸாம்

2 ஏப்ரல் 2020, 2:13 AM
வீட்டில் அமைதியாக இருங்கள்; நோய் தடுப்பு நடைமுறைகளை பின்பற்றுங்கள் - நூர் ஹிஸாம்

ஷா ஆலம், ஏப்ரல் 2:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வீட்டில் இருக்கும் படியும் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். தற்போது நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது போல் தெரிகிறது என்றாலும் தொடர்ந்து தடுப்பு  செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தமது அகப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

" ஏப்ரல் 1 தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களில் பொது மக்களின் ஒத்துழைப்பிலே தெரியும்," என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.