NATIONAL

கோவிட்-19: விளையாட்டு மற்றும் புறப்பாட நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

13 மார்ச் 2020, 2:50 AM
கோவிட்-19:  விளையாட்டு மற்றும் புறப்பாட நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

ஷா ஆலம், மார்ச் 14:

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து , இம்மாதம் பள்ளிகளில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் புறப்பாட நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக மலேசிய கல்வி அமைச்சு (கேபிஎம்) அறிவித்தது.

அமைச்சின் பணியாளர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பு குறித்து அமைச்சு வெள்யிட்டுள்ள நடைமுறை வழிகாட்டிகளை (எஸ்ஒபி) பின்பற்ற வேண்டும் என்று அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு குறிப்பாக கோவிட்-19 பரவியுள்ள நாடுகள் மற்றும் வட்டாரங்களுக்கு செல்லும் பயணங்களை ஒத்தி வைக்கும்படி அமைச்சின் பணியாளர்கள் அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர். நோய் கண்டிருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனை, பேரிடர் தயார் நிலை மற்றும் நெருக்கடி நிவராண மையங்களை (சிபிஆர்சி) நாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.