NATIONAL

மந்திரி பெசார்: மாற்று ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை

9 மார்ச் 2020, 5:50 AM
மந்திரி பெசார்: மாற்று ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை

ஷா ஆலம், மார்ச் 10:

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பெர்சத்து கட்சியின் மாநில தலைவர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரியின் காலியான இடத்தை நிரப்பக் கூடிய வேட்பாளர் தொடர்பில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார். இந்த நடவடிக்கை மிக நீண்டகாலம் பிடிக்கும் என்றும் தகுதியான மற்றும் திறமையான வேட்பாளர் அனைவருடன் இணைந்து வேலை செய்பவராக இருத்தல் அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.

 

" நமக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது, இதை முறையாக செய்ய வேண்டும். என்னுடன் இணைந்து வேலை செய்பவராக இருக்க வேண்டியது அவசியம். அப்படி தேர்வு செய்யப்படவில்லை என்றால் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம் இல்லை. சம்பந்தப்பட்டவர் ஒருங்கிணைந்த சிந்தனை கொண்டவராகவும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்," என்று சிலாங்கூர் மாநில பொதுச் சேவை ஊழியர்களின் மாதாந்திர பேரணியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.