NATIONAL

1எம்டிபி குரல் பதிவுகள் தொடர்பில் லத்தீபா கோயாவிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் !!@

16 ஜனவரி 2020, 9:11 AM
1எம்டிபி குரல் பதிவுகள் தொடர்பில் லத்தீபா கோயாவிடம் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் !!@

கோலா லம்பூர், ஜனவரி 16:

1எம்டிபி ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவுகள் விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீபா கோயாவின்  வாக்குமூலத்தை புக்கிட் அமான் பதிவுச் செய்தது.

குற்றவியல் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த (ஜேஎஸ்ஜே) 10 காவல் துறை அதிகாரிகள் குழு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்ததாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த திங்களன்றுசர்ச்சைக்குரிய உரையாடல்கள் பதிவுகளை வெளிப்படுத்திய பின்னர் லத்தீபாவின்  கௌரவத்தையும் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த சதி இருப்பதாக குற்றம் சாட்டி, எம்ஏசிசி அதிகாரி ஒருவர் காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்தார்.

பல வழக்கறிஞர்கள் உட்பட இந்த சதிச் செயலில் தொடர்புடையதாகக் கூறப்படும் பெயர்களின் பட்டியலையும் அந்த அதிகாரி சமர்ப்பித்தார்அவர்களின் அடையாளம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதிலத்தீபா கோயா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திநஜிப் சம்பந்தப்பட்ட உரையாடல்கள் பதிவு உண்மையானது என உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவற்றை வெளிப்படுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.