NATIONAL

துடிப்பாக செயலாற்றும் 15 ஜேஎம்பி, எம்சிகளுக்கு எம்பிஎஸ்ஜே அங்கீகாரம்

14 ஜனவரி 2020, 6:47 AM
துடிப்பாக செயலாற்றும் 15 ஜேஎம்பி, எம்சிகளுக்கு  எம்பிஎஸ்ஜே அங்கீகாரம்

ஷா ஆலம், ஜன.13-

சிறந்த வகையில் பங்காற்றிய 15 கூட்டு நிர்வாக கழகம் (ஜேம்பி) மற்றும் நிர்வாக கழகங்களுக்கு (எம்சி) நற்சான்றிதழோடு நினைவுச் சின்னமும் வழங்கி சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் அங்கீகரித்தது.

மன்றத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மேம்பாடுகள் மீது மேற்கொண்ட மதிப்பீட்டு நடவடிக்கையின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதாக எம்பிஎஸ்ஜே தலைவர் நோராய்னி ரோஸ்லான் தெரிவித்தார்.

குடியிருப்பாளர் சங்கங்கள் போன்ற அமைப்புகளை பொது மக்கள் தோற்றுவிப்பதை ஊக்குவிக்கும் வகையில் 150 கூட்டு நிர்வாக கழகம் மற்றும் நிர்வாக கழகங்களின் நடவடிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டன என்றார் அவர்.

இந்நடவடிக்கையானது இந்த அமைப்புகள் மேலும் துடிப்பாகவும் ஆகப்பூர்வமாகவும் செயல்படுவதற்கு ஓர் ஊக்குவிப்பாக அமைந்துள்ளதோடு எம்பிஎஸ்ஜே உடன் நல்ல ஒத்துழைப்பைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என்று அவர் விவரித்தார்.

உதவியும் வழிகாட்டுதலும் தேவைப்படும் பகுதிகளை எம்பிஎஸ்ஜே அடையாளம் காண்பதற்கு இந்த அமைப்புகள் ஒரு சிறந்த ஊடகமாகச் செயல்படுகின்றன என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.