NATIONAL

மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் சந்திப்பு; காவல்துறை விசாரணை !!!

2 டிசம்பர் 2019, 5:58 AM
மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் சந்திப்பு; காவல்துறை விசாரணை !!!

காஜாங், டிசம்பர் 2:

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (பிகேஎம்முன்னாள் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு சந்திப்புக் கூட்டம் குறித்த குற்றச்சாட்டுகளை காவல் இன்னும் விசாரித்து வருவதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், ஆயினும் காவல் துறை இவ்விவகாரம் குறித்து கண்காணித்து வருவதாகவும் காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் அகமட் ஜாபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.

அக்கூட்ட அமைப்பு குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளனஅது தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறதுமேலும் இந்த நடவடிக்கையின் அனைத்து அம்சங்களையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்” என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இன்று திங்கட்கிழமை காலை காஜாங்கில் நடந்த பிகேஎம் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக நம்பப்படும் ஒரு கூட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டதாக ஒரு செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி அன்று மலேசியா அரசாங்கத்திற்கும் பிகேஎம் நிறுவனத்திற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஹட் யாய் அமைதி ஒப்பந்தத்தின் 30-வது ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் வகையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.