NATIONAL

குவான் எங்: சமூக நலத்திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்படும்

24 நவம்பர் 2019, 7:34 AM
குவான் எங்: சமூக நலத்திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்படும்

பட்டர்வெத், நவம்பர் 24:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மத்திய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய மேலும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மத்திய அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கூடிய விரைவில் இது தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

" மத்திய அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. பொருளாதார மறுசீரமைப்பு அடைந்தவுடன் மக்கள் சமூக நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். வலுவான நிதிநிலை இருந்தால் மட்டுமே திட்டங்களை செயல்படுத்த முடியும்," என்று லிம் குவான் எங் தாமான் பண்டான், பினாங்கில் நடைபெற்ற மூத்த குடிமக்கள் உதவி நிதி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.