NATIONAL

அன்வார்: நாட்டின் தலைமைத்துவ மாற்றத்திற்கு யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது

21 நவம்பர் 2019, 1:14 PM
அன்வார்: நாட்டின் தலைமைத்துவ மாற்றத்திற்கு யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது

புத்ராஜெயா, நவம்பர் 21:

நேற்று யயாசான் கெபிம்பினான் பெர்டானாவில் கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நாட்டின் தலைமைத்துவ மாற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத்துவ மாற்றத்திற்கான நாட்கள் குறித்து யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அன்வார் ஒத்துக்கொண்டார் என பிரதமர் தெரிவித்தார்.

" நாடு எதிர் நோக்கும் சவால்கள் அன்வார் புரிந்து கொண்டுள்ளார். பல்வேறு தரப்பினரிடம் இருந்து நெருக்கடிகள் தேவையில்லை," என்று கோலா லம்பூர் உச்சநிலை மாநாடு 2019 செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.