NATIONAL

போலி கடிதம் அரசியல் எதிரிகளின் சூழ்ச்சி!

15 நவம்பர் 2019, 7:12 AM
போலி கடிதம் அரசியல் எதிரிகளின் சூழ்ச்சி!

ஷா ஆலம், நவ.15-

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியில் நாளை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று பிகேஆர் கட்சிக்காரர்களுக்கு கடிதம் வாயிலாக கட்சியின் தேசிய செயலாளர் டத்தோ சைஃபூடின் இஸ்மாயில் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுவதை அக்கட்சி மறுத்தது.

இது நம்பிக்கை கூட்டணி பங்காளி கட்சிகளுக்கு இடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக அரசியல் எதிரிகள் தயாரித்த போலி கடிதம் என்று கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் வலியுறுத்தினார்.

மேலும், பெர்சத்து வேட்பாளரான கார்மைனி சார்டினியை பிகே ஆர் ஆதரிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

இக்கடிதம் நிச்சயம் பக்காத்தான் அரசியல் எதிரிகளின் சூழ்ச்சியாகும். பக்காத்தான் பங்காளி கட்சிகளுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில் செய்யப்பட்ட சதி நாச வேலையாகும். இத்தரப்பினர் இதுபோன்ற அநாகரீக அரசியலை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.