NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர் 5 விவகாரங்களில் கவனம் செலுத்துவர்!

28 அக்டோபர் 2019, 12:04 PM
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: பக்காத்தான் வேட்பாளர் 5 விவகாரங்களில் கவனம் செலுத்துவர்!

பொந்தியான், அக்.29-

வாழ்க்கைச் செல்லவினத்தை எதிர்கொள்வது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகாரிப்பது ஆகியவை தஞ்சோங் பியா நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அதிக கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விவகாரங்களில் அடங்கும்.

உள்ளூர் மக்கள் எதிர்நோக்கும் ஐந்து முக்கிய விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவது அவசியம் என்று பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பரிந்துரைத்தார்.

“பக்காத்தான் சார்பில் இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இந்த ஐந்து விவகாரங்கள் கவனம் செலுத்துவதோடு அவற்றுக்கு தீர்வு காண முற்பட வேண்டும்” என்று அவர் சொன்னார்.

“வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு சுற்றுச் சூழல் தூய்மைக்கேடு போன்ற விவகாரங்களிலும் கவனம் செலுத்துவது அவசியமாகும்” என்று பக்காத்தான் கூட்டணி வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் முகைதீன் யாசின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.