NATIONAL

ஜாகீர் நாயக் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது!!!

20 ஆகஸ்ட் 2019, 12:05 AM
ஜாகீர் நாயக் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டது!!!

கோலா லம்பூர், ஆகஸ்ட் 20:

ஸாகீர் நாயக் மதப் பிரசாரம் செய்ய எல்லா வழிமுறைகளையும் காவல்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. கெடா, மலாக்கா, சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் அவர் பேச அனுமதிக்கப் போவதில்லை என அம்மாநில இஸ்லாமிய விவகார அதிகாரிகள் கூறினர்.

மலாக்கா முதலமைச்சர் அட்லி ஸஹாரி, கெடா ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்மாயில் சாலே, சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத் தலைவர் முகம்மட் குஸ்ரின் முனாவி, பினாங்கு துணை முதல்வர் அஹமட் ஸகியுடின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் அதை உறுதிப்படுத்தினர்.

கடந்த வார இறுதியில் பெர்லிசில் ஜாகிரும் அவரின் குடும்பத்தாரும் பேசக் கூடாது என்று தடுக்கப்பட்டது.

தன் எல்லைக்குள் யார் நுழையலாம் யார் நுழையக்கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றுள்ள சரவாக், ஜாகிர் தன் எல்லைக்குள் வரக்கூடாது எனத் தடை விதித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.

பேராக், ஜோகூர், சாபா ஆகியவற்றில் ஜாகிர் பேசுவதற்குத் தடை இல்லைதான் ஆனாலும் அவர் பேசுவதற்கு அனுமதி கோரப்பட்டால் அணுக்கமாக ஆராயப்படும் என மாநில அதிகாரிகள் கூறினர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.