NATIONAL

46,922 பங்கேற்பாளர்களுக்கு வெ. 27.59 மில்லியன் லாப ஈவு - பெல்க்ரா அறிவிப்பு

2 ஆகஸ்ட் 2019, 5:09 AM
46,922 பங்கேற்பாளர்களுக்கு வெ. 27.59 மில்லியன் லாப ஈவு - பெல்க்ரா அறிவிப்பு

கோலாலம்பூர், ஆக.2-

நாடு முழுவதிலும் தனது 46,922 பங்கேற்பாளர்களுக்கு லாபப் பங்கீடு வழங்க 27.59 மில்லியன் வெள்ளியை பெல்க்ரா நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

“இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் வரையிலான முதல் காலாண்டில் தோட்டத் தொழில்துறையின் மூலம் பெற்ற லாபத் தொகையில் 70 விழுக்காட்டை லாப ஈவுத் தொகைக்காக பெல்க்ரா ஒதுக்கியுள்ளது” என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

“இதன் எஞ்சிய 30 விழுக்காட்டு தொகை, அடுத்தாண்டு ஏப்ரலில் வழங்கப்படும் லாபப் பங்கீட்டு தொகையுடன் பகிர்ந்தளிக்கப்படும்.”.நாடு முழுவதிலும் உள்ள 1, 774 திட்டங்களில் பங்கேற்றுள்ள 112, 454 பங்கேற்பாளர்களுக்காக 220, 086 ஹெக்டர் நிலப்பரப்பில் உள்ள தோட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பை பெல்க்ரா கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.