NATIONAL

நாட்டின் நிலைமை சமூகமான பின்னர் டாக்டர் மகாதீர் பதவி விலகுவார்

1 ஆகஸ்ட் 2019, 6:05 AM
நாட்டின் நிலைமை சமூகமான பின்னர்  டாக்டர் மகாதீர் பதவி விலகுவார்

புத்ராஜெயா, ஆக 1-

நாட்டின் நிலைமை சீரடைவதோடு மேலும் முன்னேற்றம் காணத் தொடங்கியவுடன் தாம் பதவி விலகுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

“இதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கூட ஆகலாம். என்னால் உறுதியாகக் கூறமுடியாது. அந்த முயற்சியில் நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம.” என்று தமது தவணைக் காலம் முடியும் வரை தாம் பிரதமராக இருக்க வேண்டும் என்று பிகே ஆர் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறியிருப்பது குறித்து கருத்துரைத்தபோது குறிப்பிட்டார்.

ஒரு தவணை முழுமையும் சேவையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலனை செய்யப் போகிறீர்களா என்று கேட்கப்பட்ட போது இந்த விவகாரம் தொடர்பாக இதற்கு முன்பு அளித்த வாக்குறுதியைத் தாம் காப்பாற்றப் போவதாக மகாதீர் குறிப்பிட்டார்.

“ஒரு தவணை முழுமையும் தொடர வேண்டும் என்று அவர்கள் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினால் மட்டுமே அது சாத்தியமாகும். நான் எனது வாக்குறுதியை நிச்சயம் காப்பாற்றுவேன்” என்றார் மகாதீர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.