NATIONAL

அடிப் மரண விசாரணை முடிவுற்றது!

24 ஜூலை 2019, 3:48 AM
அடிப் மரண விசாரணை முடிவுற்றது!

ஷா ஆலம், ஜூலை 24-

தீயணைப்புப் படை வீரர் முகமது அடிப் முகமது காசிமின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு இனி சாட்சி எவரும் இல்லை என்பதால் மரண விசாரணை ஒரு முடிவுக்கு வந்தது.

சாட்சியம் அளித்த அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களில் நீதிமன்றம் மன நிறைவடைவதால், புதிதாக சாட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மரண விசாரணை நீதிபதி ரோஃபியா முகமது கூறினார்.

“ஆயினும், இந்த விசாரணையின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

இதனிடையே, இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்றதும், சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்கள் வாதத் தொகுப்புகளை எழுத்து வடிவில் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.