NATIONAL

பிடிபிடிஎன் கடனால்    கறுப்பு பட்டியலிடப்பட்டவர்கள் வீடுகளை வாங்கலாம்!-அமைச்சர் ஜூரைடா

10 ஜூலை 2019, 8:20 AM
பிடிபிடிஎன் கடனால்     கறுப்பு பட்டியலிடப்பட்டவர்கள்  வீடுகளை வாங்கலாம்!-அமைச்சர் ஜூரைடா

கோலாலம்பூர், ஜூலை 10:

தேசிய உயர் கல்வி கழக (பிடிபிடிஎன்) கடனால் மத்திய தகவல் தரவு முறையில் (சிக்ரிஸ்)  கறுப்பு பட்டியலிடப்பட்டவர்கள் இனி முதலாவது  வீடுகளை வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

பிடிபிடிஎன் கடனால் கறுப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள்  இந்தத்  தடையில் இருந்து விலக்களிக்கப்படுவர் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் கூறினார்.

இவ்விவகாரம் குறித்து வரும் அக்டோபர் மாத மத்தியில்  நடைபெறும் இளைஞர் வீடமைப்பு திட்ட தொடக்க விழாவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பிடிபிடிஎன் கழகத்துடன் கடந்த மாதம் தாம் பேச்சு நடத்தியதாகக் குறிப்பிட்ட அமைச்சர் இவ்விவகாரத்திற்கு இக்கழகத்தின்  தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் இணக்கம் தெரிவித்ததாகச்  சொன்னார்.

"எனினும், வீடுகளை வாங்குவோருக்கு மட்டுமே இந்த விலக்களிக்கப்படும். கார்களை வாங்குவோருக்கு அல்ல. வரும் அக்டோபரில் எல்லா திட்டங்கள் குறித்தும் நான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்" என்று தலைநகர் தாசேக் பெர்டானாவில்

ஹாய் ஹோம் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் அமைச்சர் பேசினார்.

முதல் முறையாக வீடுகளை வாங்கும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

பிடிபிடிஎன் கடனைத் திரும்பச் செலுத்தத் தவறியவர்கள் முதலாவது வீடுகளை வாங்குவதற்கு இதற்கு முன்பு தடை விதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.