NATIONAL

டிபியுபி-1 திட்டத்தை நிர்வகிக்க சிஜிசி குத்தகை நீட்டிப்பு

5 ஜூலை 2019, 3:53 AM
டிபியுபி-1 திட்டத்தை நிர்வகிக்க  சிஜிசி குத்தகை நீட்டிப்பு

கோலாலம்பூர், ஜூலை 5-

பூமிபுத்ரா தொழில்முனைவர் நிதி திட்டத்தை (டிபியுபி-1) நிர்வகிக்கும் கிரேடிட் கியாரண்டி கார்பிரேஷன் நிறுவனத்தின் (சிஜிசி) குத்தகையை மேலும் மூன்றாண்டுகளுக்கு நிதியமைச்சு நீடித்துள்ளது.

டிபியுபி-1 நிதி உதவி வழங்கும் குத்தகையை 2022 ஜூன் 30ஆம் தேதி வரையில் சிஜிசி நிர்வகிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிபடுத்தும் அரசாங்கத்தின் கடப்பாட்டிற்கு ஏற்ப இந்த நிதி திட்டம் அமைந்துள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

அரசாங்கம் அல்லது அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் அல்லது பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் குத்தகைகளைப் பெறும் பூமிபுத்ரா தொழில் முனைவர்களுக்கு மூலதனத்தை ஏற்படுத்தித் தருவதே மத்திய வங்கியின் டிபியுபி-1 நிதி திட்டத்தின் நோக்கமாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.