NATIONAL

தேசிய விளையாட்டு மாதத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்பர் - ஜேபிஎஸ் இலக்கு

2 ஜூலை 2019, 8:44 AM
தேசிய விளையாட்டு மாதத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்பர் - ஜேபிஎஸ் இலக்கு

ஷா ஆலம், ஜூலை 2-

தேசிய விளையாட்டு மாதத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிகளில் ஒரு மில்லியன் பேர் பங்கேற்பர் என்று சிலாங்கூர் இளைஞர் மற்றும் விளையாட்டு இலாகா (ஜேபிஎஸ்) இலக்கு நிர்ணயித்துள்ளது.

இம்மாதம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தனது தரப்பு திட்டமிட்டு வருவதாக அதன் இயக்குநர் சாப்ரான் அப்துல் பஹார் கூறினார்.

“இளைஞர், விளையாட்டு மற்றும் ராக்கான் மூடா ஆகியவை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சிலாங்கூர் ஜேபிஎஸ் தொடர்ந்து முயன்று வருகிறது” என்றார் அவர்.

“எனவே, இந்நிகழ்ச்சிகளில் ஒரு மில்லியன் பேர் பங்கேற்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்” என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.