NATIONAL

மக்களின் விருப்பமே அரச விசாரணை ஆணையம்! - துன் மகாதீர்

7 ஜூன் 2019, 9:55 AM
மக்களின் விருப்பமே  அரச விசாரணை ஆணையம்! - துன் மகாதீர்

புத்ராஜெயா, ஜூன் 6-

நீதித்துறையின் முறைகேடுகள் மீதான அரச விசாரணை ஆணையம் என்பது மலேசிய மக்களின் கோரிக்கையாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

நீதித்துறை முறைகேடுகள் மீதான அரச விசாரணை ஆணையம் தோற்றுவிக்கப்படுவதற்குப் பதிலாக உள் விசாரணையை பரிந்துரை செய்த கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராமின் அறிக்கை மீது மகாதீர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.

“பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆயினும் மக்கள் அரச விசாரணை ஆணையத்தையே விரும்புகின்றனர். எனவே மக்களின் கருத்துக்கு நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்” என்றார் அவர்

இந்த விவகாரத்திற்கு அரச விசாரணை ஆணையம்தான் சிறந்த தீர்வா என்று அவரிடம் வினவப்பட்டதற்கு “நாம் என்ன நினைக்கிறோம் என்பது முக்கியமல்ல... மக்களுக்கு எது தேவை என்பதே முக்கியமாகும்” என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.