NATIONAL

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை: நெரிசல் நேரத்தில் அவசர வழி திறக்கப்படும்

4 ஜூன் 2019, 6:06 AM
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை:  நெரிசல் நேரத்தில் அவசர வழி திறக்கப்படும்

ஈப்போ, ஜூன் 4-

போக்குவரத்து நெரிசல் அதிகமானால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அருகே உள்ள அவசர வழியைத் திறப்பது குறித்து பேராக் சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) பரிசீலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிலிம் ரீவர் பகுதியில் போக்குவரத்து தற்போது சீராக இருந்தாலும், தேவை ஏற்பட்டால் அங்குள்ள அவசர வழி பொது மக்களின் பயனீட்டிற்கு திறக்கப்படும் என்று பிளஸ் நிறுவனத்தின் இயக்குனர் செவெரினஸ் துகா கூறினார்.

“கடந்த மே 29 முதல், இங்குள்ள போக்குவரத்து சீராகவே உள்ளது. வரும் ஜூன் 7, 8 தேதிகளில் நெரிசல் அதிகமானால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அவசர வழி திறக்கப்படும்” என்றும் அவர் சொன்னார்.

இதனிடையே ,கடந்த மே 29 தொடங்கி இன்று வரை, பல்வேறு சாலை குற்றங்களுக்காக 1,099 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.