NATIONAL

பெருநாளை முன்னிட்டு பயணங்களை அதிகரிப்பீர்! விமான நிறுவனங்களுக்கு அமைச்சு கோரிக்கை

23 மே 2019, 11:00 PM
பெருநாளை முன்னிட்டு பயணங்களை அதிகரிப்பீர்! விமான நிறுவனங்களுக்கு அமைச்சு கோரிக்கை

கோலாலம்பூர், மே 24-

பயணிகளுக்கு அதிகத் தேர்வுகளை வழங்கும் வகையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு உள்நாட்டு விமான பயணங்களை அதிகரிக்கும்படி விமான நிறுவனங்களை போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டது.

விமானப் பயணங்களுக்கான டிக்கெட்டுகள் அதிகளவில் விற்பனையானால், பயணத்திற்கான சராசரி செலவு குறையும் என்று அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார். சொற்ப எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் மட்டுமே உள்ள நிலையில் டிக்கெட்டுகளின் விலை உயரக்கூடும். மாறாக, அனைத்து டிக்கெட்டுகளின் விலை ஒட்டு மொத்தமாக உயராது என்று அவர் தெளிவு படுத்தினார்.

குறிப்பிட்ட பயணத்திற்கு அதிக எண்ணிக்கையிலான தேவை ஏற்படும் பட்சத்தில் மட்டுமே டிக்கெட்டுகளின் விலை உயரும் என்று நோன்பு பெருநாள் காலத்தில் விமான டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மேற்கண்ட விளக்கத்தை அந்தோனில் லோக் அளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.