NATIONAL

பெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

10 ஏப்ரல் 2019, 6:28 AM
பெல்டா வெள்ளை அறிக்கை: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

சிரம்பான், ஏப்.9-

நாடாளுமன்றத்தில் வரும் புதன்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள பெல்டா வெள்ளை அறிக்கையில் பெல்டா தோட்ட புதிய வர்த்தக மாதிரி மற்றும் பெல்டா தோட்டக் குடியேற்றக்காரர்களுக்கான சமூக உதவி திட்டம் குறித்த பரிந்துரைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வெள்ளை அறிக்கை குறித்து அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை விவாதித்ததாக பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

“அந்தக் கூட்டத்தில் பெல்டாவில் ஏற்படுள்ள நிதி நெருக்கடி குறித்து மட்டும் விவாதிக்கவில்லை. மாறாக, பெல்டா குடியேற்றக்காரர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது” என்று ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அஸ்மின் தெரிவித்தார்.

பெல்டாவின் உண்மையான நிதிநிலை குறித்து சுயேட்சை கணக்காய்வு நிறுவனம் செய்த ஆய்வின் முடிவுகள் அடங்கியுள்ள பெல்டா வெள்ளை அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.