NATIONAL

மக்களின் வேர்வைத் துளிகளால் உருவானது கெஅடிலானின் போராட்டம் - வான் அஜீஸா

4 ஏப்ரல் 2019, 11:43 PM
மக்களின் வேர்வைத் துளிகளால் உருவானது கெஅடிலானின் போராட்டம் - வான் அஜீஸா

சிரம்பான், ஏப்.5-

மக்களின் போராட்டமே கெஅடிலான் கட்சியின் போராட்டம் என்பதை கட்சி உறுப்பினர்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாடு முழுவதிலும் அக்கட்சியின் உறுப்பினர்களை அதன் அலோசனை மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.

இக்கட்சி மக்களின் வேர்வைத் துளிகளால் உருவான ஒரு கட்சி என்றும் அதன் நீதிக்காண போராட்டம் தொடர வேண்டும் என்று துணைப் பிரதமரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவருமான வான் அஜீஸா நினைவுறுத்தினார்.

“நமது போராட்டம் யாவும் மக்களோடு சேர்ந்து நடத்திய போராட்டங்களாகும்” என்று கட்சியின் 20ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் ஆற்றிய உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஆலோசகர் சையிட் ஹூசேன் அலி, தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நாசுத்தியோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.