NATIONAL

ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கிட வேண்டாம்

23 மார்ச் 2019, 8:02 AM
ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கிட வேண்டாம்

கோலாலம்பூர், மார்ச் 21:

ஊடகவியலாளர்கள் விவகாரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் குறுக்கிட வேண்டாம் என தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது டுவிட்டர் பக்கம் வாயிலாதத் தெரிவித்துள்ளார்.

“உண்மையை வெளிப்படுத்த அவர்கள் அங்கு கூடியுள்ளார்கள். நீங்கள் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால்உங்கள் உண்மைகளை அவர்களிடம் விளக்க வேண்டும்அது எழுத்துப்பூர்வமாகவும் இருக்கலாம். அதனைவிடுத்து அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டுவதும், மிரட்டுவதும் சதியான செயலாக அமையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமைஇரண்டு அம்னோ தலைவர்கள்மலேசியாகினி செய்தி சேகரிப்பாளர்களை தகாத வார்த்தையால் திட்டியும், நெருக்கமாக நின்று மிரட்டியதுமாக மலேசியாகினி செய்தித் தளம் குறிப்பிட்டிருந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.