NATIONAL

நியூசிலாந்து: 2 பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

17 மார்ச் 2019, 7:36 AM
நியூசிலாந்து: 2 பள்ளிவாசல்களில்  துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

புத்ரா ஜெயா, மார்ச் 15-

நியூசிலாந்தில் கிறிஸ்ட்செர்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்ளை அறிந்து தாம் அதிர்ச்சியும் துயரமும் அடைந்துள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் புவான் ஹாஜா ஜுரைடா கமாருடின் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவங்களில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு நியூசிலாந்தில் மீண்டும் அமைதி திரும்பும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வன்முறையை தாம் மிகவும் கண்டிப்பதாக கூறியதோடு இந்தக் கொடூரமான செயலைப் புரிந்தவர்களை நியூசிலாந்து அரசு நீதிக்கு முன் நிறுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.