NATIONAL

பாக்காத்தான் ஆட்சியில் செமினி துரித மேம்பாடு கண்டுவருகிறது

25 பிப்ரவரி 2019, 2:34 AM
பாக்காத்தான் ஆட்சியில் செமினி துரித மேம்பாடு கண்டுவருகிறது

செமினி, பிப்.25:

மாநிலத்தின் கோடியில் இருப்பதால் செமினி தொகுதியை மாநில அரசாங்கம் கவனிக்காமல் இருப்பதற்கு எந்தவொரு காரணமும் இல்லை என்று கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தெரிவித்தார்.

மாறாக, மாநிலம் முழுமைக்கும், அது நகரமாக இருந்தாலும் கிராமமாக இருந்தாலும், சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து வளமும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பொருளாதார விவகார அமைச்சருமான அஸ்மின் வலியுறுத்தினார்.

“2008ஆம் ஆண்டு தொடங்கி சிலாங்கூரில் ஆட்சி நடத்தி வரும் பாக்காத்தான் சுபாங் போன்ற பெரிய நகரங்களை மட்டுமல்லாது செமினி உட்பட அனைத்து பகுதிகளையும் மேம்படுத்தி வருகிறது” என்றார் அவர்.

“ஏனெனில், கிராம வாசிகளுக்கும் நாட்டின் வளப்பத்தை கோர உரிமையுள்ளது.. இன்று கோம்பாக்கைக் காட்டிலும் செமினி அதிக மேம்பாடு கண்டுள்ளது என்பது கண்கூடு” என்று அஸ்மின் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.