NATIONAL

தேர்தல் காலங்களில் இனவாதப் பிரச்னை சில தரப்பினரின் பொறுப்பற்ற நடவடிக்கை!

25 பிப்ரவரி 2019, 2:07 AM
தேர்தல் காலங்களில் இனவாதப் பிரச்னை சில தரப்பினரின் பொறுப்பற்ற நடவடிக்கை!

செமினி, பிப்.25:

தேர்தல் காலங்களில் இன விவகாரங்களைத் தோற்றுவிப்பது சில பொறுப்பற்ற தரப்புகளின் வாடிக்கையாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இவற்றுள், சிந்தனைக்கு ஒவ்வாத பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி நிலைமையை மேலும் மோசமாக்கும் இந்தத் தரப்பினரின் நடவடிக்கையானது மிகவும் கவலையளிப்பதாக தற்காப்பு அமைச்சரும் அமானா கட்சியின் தலைவருமான முகமட் சாபு கூறினார்.

இதற்கு முன்பு எப்பொழுதும் நடைபெற்றிராத சம்பவமாக கோயில் சிலை ஒன்று தொழுகைக் கூடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது..அதுவும் இங்கு இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் வழி இனங்களுக்ககிடையிலான இணக்கத்தை பணயம் வைக்கக் கூட இத்தரப்பினர் துணிந்துவிட்டனர் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுவதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.