NATIONAL

எஸ்பிஎன்பி தலைவராக முகமது நியமனம் வாரிய உறுப்பினராக ஜெயசீலன் தேர்வு

22 பிப்ரவரி 2019, 8:11 AM
எஸ்பிஎன்பி தலைவராக முகமது நியமனம் வாரிய உறுப்பினராக ஜெயசீலன் தேர்வு

கோலாலம்பூர், பிப்.23:

வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ முகமது மெந்தெக் எஸ்பிஎன்பி எனப்படும் தேசிய வீடமைப்பு நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் கடந்த ஜனவரி 31 நடப்புக்கு வந்தது.

2015ஆம் ஆண்டு முதல் வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சில் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த முகமது புள்ளிவிபரத் துறையில் பட்டப்படிப்பும் அமெரிக்காவின் மின்னசோத்தா பல்கலைக்கழ்கத்தில் கணிதத் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார் என்று எஸ்பி என்பி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இதனிடையே, வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சின் தேசிய வீடமைப்பு இலாகா தலைமை இயக்குநர் கே.என். ஜெயசீலன் எஸ்பிஎன்பி வாரியத்தின் உறுப்பினராக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.