NATIONAL

1எம்டிபி வழக்கு : தற்காப்பு தரப்பிடம் 421 ஆவணங்கள் ஒப்படைப்பு!

31 ஜனவரி 2019, 6:32 AM
1எம்டிபி வழக்கு : தற்காப்பு தரப்பிடம் 421 ஆவணங்கள் ஒப்படைப்பு!

கோலாலம்பூர், ஜன.31:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை 2.28 பில்லியன் வெள்ளி மதிப்பிலான 1எம்டிபி ஊழல் வழக்குடன் தொடர்பு படுத்தும் 421 ஆவணங்கள் தற்காப்புத் தரப்பிடம் விசாரணைக்காக வழங்கப்பட்டன.

உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கோலின் லாரன்ஸ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு நிர்வாக நடவடிக்கையின் போது இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக அரச தரப்பு மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

ஆயினும், நஜிப் எதிர்நோக்கும் 1எம்டிபி தொடர்பான 21 சட்டவிரோத பணச் சலவை குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு படுத்தும் மேலும் சில ஆவணங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயன்று வருவதாக முன்னாள் கூட்டரசு நீதிபதியான ஸ்ரீராம் கூறினார்.

எனினும், சம்பந்தப்பட்ட ஆவணங்களை வங்கிகளிடம் பெறுவதற்கு கால அவகாசம் தேவை என்றார் அவர்.

இந்த வழக்கு நிர்வாக நடவடிக்கை மீண்டும் பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.