NATIONAL

அல்-சுல்தான் அப்துல்லா மாமன்னராக பிரகடனம்

31 ஜனவரி 2019, 3:50 AM
அல்-சுல்தான் அப்துல்லா மாமன்னராக பிரகடனம்

கோலாலம்பூர், ஜன,31:

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற மாமன்னர் பதிவியேற்பு , சத்திய பிரமாண அறிக்கை வாசித்தல் மற்றும் கையெழுத்திடல் சடங்கிற்குப் பின்னர் மாமன்னரின் பிரகடன அறிக்கையை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வாசித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தின் 32 ஷரத்தின் கீழ் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தால் தேர்வு செய்யப்படுபவர் மாட்சிமைத் தங்கிய மாமன்னர் என்றழைக்கப்படுவார்.

அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பட்டியலின்படி சுல்தான் அல்-அப்துல்லா நாட்டின் 16ஆவது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே, சத்திய பிரமாணம் செய்து பதவியேற்றுள்ள அல்-சுல்தான் அப்துல்லா இனி மாட்சிமைத் தங்கிய மாமன்னர் என்று இதன் வழி பிரகடனம் செய்யப்படுவதாக பிரதமர் மகாதீர் அறிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.