NATIONAL

மூதாட்டிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மந்திரி பெசார்!

21 ஜனவரி 2019, 10:33 AM
மூதாட்டிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த மந்திரி பெசார்!

ஜெலாய், ஜன.22:

சிலாங்கூர் மந்திரி பெசாரை நேரில் பார்ப்பேன் என்று சற்றும் எதிர்பார்த்திராத 85 வயது சாயேடா புசுவிற்கு அமிருடின் ஷாரின் திடீர் வருகை அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருந்த அவரை நேரில் தனது வீட்டின் வாசலில் நேரில் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த மூதாட்டி வரவேற்றார்.

முதுமை நோயினால் கடந்த 4 ஆண்டுகளாக அவதியுற்று வரும் சாயேடா தனது மகனுடன் அங்கு வசித்து வருகிறார்.

கேமரன் மலையில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் நடவடிக்கையில் சிலாங்கூர் மாநில கெ அடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான அமிருடின் நேற்று ஈடுபட்டார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவாறு அமிருடின் இங்குள்ள வாக்காளர்களைச் சந்தித்து உரையாடினார்.

முன்னதாக, தனித்து வாழும் தாயான ஹர்யாந்தி ஓஸ்மானின் துயரக் கதையையும் அவர் செவிமெடுத்தார்.

மாற்றுத் திறனாளி குழந்தை ஒன்றுடன் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் தனக்கு அரசாங்க உதவி ஏதும் கிடைக்கவில்லை என்ற தனது துயரத்தை அமிருடின் பகிர்ந்து கொண்டார் 4 குழந்தைகளுக்குத் தாயான அப்பெண்மணி.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.