NATIONAL

அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த மாதத்தில் வெளியிடப்படும்

26 டிசம்பர் 2018, 12:35 PM
அடிப்பின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த மாதத்தில் வெளியிடப்படும்

கோலாலம்பூர், டிசம்பர் 26:

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிமின் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கை அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சு கோடி காட்டியுள்ளது. 

மருத்துவ வல்லுநர்கள், இரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், மேலும், ஒரு மாதக் காலம் வரை தேவைப்படும் என துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார்எனினும்அடிப் மரணம் குறித்து உண்மையான காரணத்தை உறுதிப்படுத்த காய அறிக்கையே போதுமானது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் நடந்த சீ பீல்ட் கோயில் கலவரத்தில் 24 வயதுடைய தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமட் காசிம் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினால் தாக்கப்பட்டு, டிசம்பர் 17-ஆம் தேதி தேசிய இருதய சிகிச்சை மையத்தில் காலமானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.