NATIONAL

முகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது

13 டிசம்பர் 2018, 9:42 AM
முகமட் அடிப் உடல்நிலை முன்னேற்றம் உள்ளது

ஷா ஆலம், டிசம்பர் 13:

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம்யின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக நிபுணத்துவ மருத்துவர்கள் கூறியதாக தீயணைப்பு இலாகா தெரிவித்தது.

அடிப் உடல்நிலை சீராகவும் முன்னேற்றமாகவும் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அடிப்யின் வாயால் தாம் நலமுடன் உள்ளேன் என்பதை கூறும் அந்நாளுக்காக காத்திருப்பதாக அதன் தலைமை நிர்வாகி டத்தோ முகமட் அம்டான் வாகிட் தெரிவித்தார்.

தற்போது அடிப்பால் பேச முடிவதாக தகவல் கிடைத்திருப்பதாக கூறிய அவர் இருந்த போதிலும் அடிப்யிடம் வாக்குமூலம் பெற இன்னமும் அனுமதிக்கப்படவில்லை என்றார்.

அடிப் இன்னமும் நிபுணத்துவ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறிய அவர் சைகையும் எழுதவும் முடியும் நிலையில் சம்பவத்தின் போது நிகழ்ந்த உண்மை விரைவில் தெரிய வரும் என்றார்.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனையையும் சிகிச்சையையும் மேற்கொண்டு வரும் நிலையில் விரைவில் அடிப்யின் உடல்நிலை குறித்த முழு விவரத்தையும் அறிய முடியும் என நம்புவதாக கூறினார்.

தற்போது சுயமாக சுவாசிக்கும் அடிப் இதய துடிப்பிற்கும் தற்போது இயந்திர உதவியையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.