SELANGOR

மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது

10 டிசம்பர் 2018, 3:42 AM
மந்திரி பெசார்: சிலாங்கூர் மாநிலம் இந்தியர்களுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்கிறது

பத்து கேவ்ஸ், டிசம்பர் 8:

சிலாங்கூர் மாநிலம், இந்தியர்களுக்கு குறிப்பாக கல்வி மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு அடைய பல்வேறு உதவிகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். 2019-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் ரிம 3 மில்லியனை இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது என்றார்.

இந்திய தொழில் முனைவர் திட்டம் மலேசியாவில் முதல் முறையாக செயல்படுத்தியது சிலாஙாகூரில் தான் என்று சொன்னால் அது மிகையாகாது என்று பெருமையுடன் கூறினார்.

" இது மட்டும் அல்ல, ஷா ஆலாமில் அமைந்துள்ள மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளியில் ரிம 4 மில்லியன் செலவில் மாணவர் தங்கும் விடுதி கட்டப் படவிருக்கிறது. நாம் வெறுமனே நவீன பள்ளியை கட்டவில்லை. மாறாக, பல்வேறு வசதிகளை கொண்ட பள்ளியாக இது அமையும், " என்று சுங்கை துவா சட்ட மன்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.