SELANGOR

ஐசேட் ஆர்பாட்டத்தில் தம்மை சம்பந்தபடுத்தியதை எண்ணி சிலாங்கூர் சுல்தான் கவலை !!!

7 டிசம்பர் 2018, 10:23 AM
ஐசேட் ஆர்பாட்டத்தில் தம்மை சம்பந்தபடுத்தியதை எண்ணி சிலாங்கூர் சுல்தான் கவலை !!!

ஷா ஆலம், டிசம்பர் 7:

மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர் சுல்தான் ஷாராபூடின் இட்ரிஸ் ஷா தாம் ஐசேட் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதாக செய்திகளை பரப்பி வரும் செயலை எண்ணி கவலை அடைவதாக சிலாங்கூர் சுல்தானின் அந்தரங்க செயலாளர் டத்தோ முகமட் மூனிர் பானி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். சுல்தானை சம்பந்தபடுத்திய நடவடிக்கை பொது மக்களை குழப்பம் ஏற்படுத்தவே என்றார்.

" சிலாங்கூர் மாநிலத்தை ஆட்சி செய்யும் அரசர் எந்த ஒரு ஆர்பாட்டத்திலும் கலந்து கொள்ளக் கூடாது. ஆகவே, சிலாங்கூர் அரசரை எந்த ஒரு அரசியல் கட்சிகள் அல்லது அரசு சார்பற்ற அமைப்புகள் ஆர்பாட்டத்தில் தம்மை சம்பந்தபடுத்துவதை தவிர்க்கும் படி ஆணை பிறப்பித்தார், " என்று அறிக்கையில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.