NATIONAL

யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் நவம்பர் 29-இல் அறிவிப்பு!!

20 நவம்பர் 2018, 3:05 AM
யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் நவம்பர் 29-இல் அறிவிப்பு!!

கோலாலம்பூர், நவம்பர் 20:

2018ஆம் ஆண்டுக்கான ஆரம்ப்பள்ளிகளின் யு.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் வரும் நவம்பர் 29இல் வெளியிடப்படும் என தெர்விக்கப்பட்டது.

அன்றைய நாளில் தேர்வு முடிவுகளை தத்தம் பள்ளிகளில் காலை மணி 10தொடங்கி மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என கல்வி தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் அமின் செனின் தெரிவித்தார்.

அதேவேளையில்,2018ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.ஆர் முடிவுகளை mySMS 15888 எனும் குறுந்தகவல் சேவையின் மூலமும் தெரிந்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

இச்சேவை நவம்பர் 29 ஆம் தேதி காலை 10 மணி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி மாலை மணி 6க்கு முடிவடையும் என்றும் கூறினார்.

அதேவேளையில்,சம்மதப்பட்ட மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் பெற்றோர்களோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கல்வி தலைமை இயக்குனர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.