NATIONAL

அஸ்மின்: கட்சியின் அங்கத்தினர்கள் ஒற்றுமை உணர்வுகளை வலுப்படுத்த வேண்டும்

15 நவம்பர் 2018, 3:10 PM
அஸ்மின்: கட்சியின் அங்கத்தினர்கள் ஒற்றுமை உணர்வுகளை வலுப்படுத்த வேண்டும்
அஸ்மின்: கட்சியின் அங்கத்தினர்கள் ஒற்றுமை உணர்வுகளை வலுப்படுத்த வேண்டும்
அஸ்மின்: கட்சியின் அங்கத்தினர்கள் ஒற்றுமை உணர்வுகளை வலுப்படுத்த வேண்டும்

ஷா ஆலம், நவம்பர் 15:

கெஅடிலான் கட்சியின் அனைத்து அங்கத்தினர்களும் தேர்தல் முடிவுற்ற நிலையில் ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். கட்சியின் ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருக்கும் நிலையில் அந்நிய சக்தியை எதிர்க் கொள்ள இதுவே சரியான தருணம் என்று நினைவுறுத்தினார்.

“ கெஅடிலான் கட்சியின் தேர்தல் ஒரு மரத்தோன் போன்றது. உலகிலேயே மிக நீண்ட காலம் நடத்தப்படும் கட்சித் தேர்தல் ஆகும். தலைமைத்துவம் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிறந்த சேவையை வழங்க முன் வந்துள்ளனர். சுங்கை பட்டாணி முதல் ஜோகூர் பாரு வரை, கோம்பாக்கில் இருந்து பண்டான் வரை மற்றும் தென் சீனக் கடலை தாண்டி தாவாவ், பென்சியாங்கான் மற்றும் ஜூலாவ் வரை பிரச்சாரம் செய்தார்கள்," என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியின் தேசிய மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கும் உரையில் இவ்வாறு அஸ்மின் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.