NATIONAL

எஸ்பிஆர்: சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் தேதி திங்களன்று முடிவு செய்யப்படும்

4 ஜூலை 2018, 3:13 AM
எஸ்பிஆர்: சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தல் தேதி திங்களன்று முடிவு செய்யப்படும்

சா ஆலாம்,ஜூலை04:

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்யும் வகையில் வரும் திங்கள் அன்று தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சாஃபியின் மரணத்தால் காலியாக இருக்கும் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் திங்கள்கிழமை கூடும் தேர்தல் ஆணையம் சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலுக்கான தேதி வேட்புமனு தாக்கல்,அஞ்சல் வாக்கு உட்பட பல்வேறு விவகாரங்களை அது ஆராய்ந்து முடிவு செய்யும் அதன் செயலாளர் டத்தோ முகமட் இலியாஸ் அபு பக்கர் கூறினார்.காலை 10மணி அளவில் தொடங்கும் அக்கூட்டத்திற்கு மாநில துணை தேர்தல் ஆணையர் டான்ஸ்ரீ ஓட்மான் மாமுட் தலைமைதாங்குவார் என்றும் கூறினார்.

அதன் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெறும் என கூறிய அவர் முன்னதாக மாநில சட்டமன்ற சபாநாயகர் சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதி காலியானது தொடர்பிலான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்துவிட்டார் என்றும் அவர் மேலும் கூறினார்.

மேலும்,மரணம் அடைந்த சுஹாய்மி சாஃபியின் மரண சான்றிதழ் அவரது குடும்பத்திடமிருந்து பெறப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும்,மரண சான்றிதழ் கிடைக்கப்பெற்ற பின்னரே சம்மதப்பட்ட தொகுதி காலியானதை உறுதி செய்வதோடு இடைத்தேர்தல் குறித்த அடுத்தக்கட்ட நகர்வையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.