NATIONAL

பிஎன் காலத்தில் ஏற்பட்ட கடனை தீர்க்க முயற்சியில் ஈடுபடும் இளையோருக்கு ஆதரவு !!!

26 மே 2018, 9:00 AM
பிஎன் காலத்தில் ஏற்பட்ட கடனை தீர்க்க முயற்சியில் ஈடுபடும் இளையோருக்கு ஆதரவு !!!

ஷா ஆலம், மே 26:

அம்னோ தேசிய முன்னணி நிர்வாகத்தில் ஏற்பட்ட மலேசியா நாட்டின் கடனை தீர்க்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் சமூக நல ஆர்வலர் நூர் ஷாஸாரீனா பக்தியின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற உறுப்பினர் ஜூவாரியா ஸூல்கிப்லி தெரிவித்தார். மலேசிய இளையோர், நாட்டை மறுசீரமைப்பு செய்ய முயற்சி உன்னதமான நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"  இந்த முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்று. ஆனாலும், நாட்டின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியது மத்திய அரசாங்கத்தின் தலையாய கடமை. ஆகவே, மலேசிய மக்கள் அனைவரும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை வைக்க வேண்டும். மலேசிய நாட்டின் நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்வதில் துன் மகாதீருக்கு முழு ஆதரவு வழங்க தயாராக இருக்க வேண்டும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு ஜூவாரியா ஸூல்கிப்லி தெரிவித்தார்.

1 திரிலியன் எட்டியுள்ள மலேசிய நாட்டின் கடனை தீர்க்க அனைத்து மலேசியர்களை நிதி வழங்க அழைக்கும் நூர் ஷாஸாரீனா முயற்சியை மேற்கோள்காட்டி இவ்வாறு கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.