NATIONAL

35 பைகளில் ரிம 114 மில்லியன் இருந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது

25 மே 2018, 6:47 AM
35 பைகளில் ரிம 114 மில்லியன் இருந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது
35 பைகளில் ரிம 114 மில்லியன் இருந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது

ஷா ஆலம், மே 25:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கு சொந்தமான பவீலியன் ரெஸிடன்ட் வீட்டில் சோதனை செய்த போது கைப்பற்றிய  72 பைகளில் 35-இல் ரிம 114 மில்லியன் இருந்ததாக இன்று காவல்துறை உறுதிப்படுத்தியது. புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமார் சிங் இஸார் சிங் இதனை தெரிவித்தார். 26 நாடுகளை சேர்ந்த நாணயங்கள் இதில் அடங்கும் என்று விவரித்தார்.

இதனிடையே, கைப்பற்றிய நாணயங்களை கணக்கிட 21 பேங்க் நெகாராவின் உழியர்களும், ஒரு இஸ்லாமிய வங்கியின் ஊழியர் மற்றும் 11 கணக்கிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாக அமார் சிங் கூறினார்.

 

 

 

 

 

"  ஆனாலும், மேலும் 37 பைகளில் உள்ள விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் அடுத்த வாரம் கணக்கிடப்படும். இதன் மதிப்புகளை கணக்கிட நிபுணர்களின் உதவியை நாட வேண்டி இருக்கிறது," என்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.