NATIONAL

1எம்டிபி-யால் கடனை திருப்பி தர இயலாது !!!

23 மே 2018, 1:21 PM
1எம்டிபி-யால் கடனை திருப்பி தர இயலாது !!!

1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) கடனை, அந்த நிறுவனத்தால் எதிர் வரும் மே 30-இல் திருப்பி தர இயலாது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார். மேற்கண்ட தகவல்களை 1எம்டிபி நிறுவனத்தின் இயக்குனர்களான நோர்ஹாஸ்மான் ஆயோப், கமால் முகமட் அலி, தலைமை செயல் அதிகாரி அருள் கந்தசாமி, முன்னாள் தலைமை நிதி நிர்வாகி அஸ்மி தாஹீர் மற்றும் முன்னாள் நிறுவன வழக்கறிஞர் இவான் சென் ஆகியோரை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ளார்.

" 1எம்டிபி-யின் இயக்குனர், நிறுவனம் திவாலாகி விட்டது என்றும் கடனை திருப்பி செலுத்த முடியாது என்று உறுதி படுத்தி விட்டார். முன்னாள் தலைமை நிதி நிர்வாகி, அஸ்மி தாஹீர் நிதியமைச்சுக்கு மார்ச் மாதத்தில் எழுதிய கடிதத்தில் 1எம்டிபி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடனுக்கான வட்டியை திருப்பி தர இயலாது கூறியிருந்தார்," என்று குவான் எங் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.