NATIONAL

மலேசியாவை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே இலக்கு!!

20 மே 2018, 2:15 AM
மலேசியாவை சிறந்த நிலைக்கு இட்டுச் செல்வதே இலக்கு!!

ஷா ஆலாம்,மே20:

நாட்டை சிறந்த இலக்கிற்கும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கும் கொண்டு செல்வதே தமது இலக்கு என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவையில் முழு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் தாம் தனக்கான கடமையினை சிறந்த முறையில் முன்னெடுப்பேன் என்றும் கூறிய கோபிந் சிங் நாட்டை சரியான தடத்தில் பயணிக்க வைப்பதே தமது லட்சியம் எனவும் கூறினார்.

தனது இந்த நியமனம் பெரும் அங்கீகாரமானது என்றும் பெருமிதம் கொண்ட கோபிந் சிங் தம்மீது நம்பிக்கை கொண்டு இவ்வாய்ப்பினை வழங்கிய பிரதமர் துன் மகாதீருக்கு நன்றியையும் கூறினார்.

சிறந்த ஒன்றை தம்மால் வழங்கிட முடியும் என்றும் கூறிய கோபிந் சிங் நாட்டின் எதிர்காலத்துற்கு சிறந்த நிலையில் பங்காற்றுவேன் என்றார்.

இதற்கிடையில்,புதிய அமைச்சரவையில் கல்வி அமைச்சராக டாக்டர் மஸ்லி மாலிக் நியமனம் பெற்ற வேளையில் தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் ரீனா ஹருண் புறநகர் மேம்பாட்டு அமைச்சராக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.