NATIONAL

அரச ஆலோசனை மன்றத்தில் அன்வார் இப்ராஹிம் !!

17 மே 2018, 8:30 AM
அரச ஆலோசனை மன்றத்தில் அன்வார் இப்ராஹிம் !!

பெட்டாலிங் ஜெயா,மே18:

துன் மகாதீர் அமைத்த அரச ஆலோசனை மன்றத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் 6பேரை துன் மகாதீர் நியமனம் செய்திருந்த வேளையில் தற்போது அன்வார் இப்ராஹிமையும் அம்மன்றத்தில் துன் மகாதீர் நியமனம் செய்தார்.

அந்த மன்றத்தில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தும் ஐவர் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அதில் 22பேர் அங்கம் பெறுவர் என்றும் மகாதீர் கூறினார்.

அதுமட்டுமின்றி,அதில் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவும் இடம் பெற்றிருக்கும் என்றும் கூறிய துன் மகாதீர் இம்மன்றம் மாதம் ஒருமுறை அல்லது சூழலுக்கு ஏற்ப அதன் சந்திப்பினை நடத்தும் என்றார்.அதன் மூலம் நன் முடிவுகளும் ஆலோசனைகளும் முன் வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில்,இந்தியர்கள் மற்றும் சிறுபான்மை இனம்,பூர்வகுடி ஆகியவற்றின் மீது தனித்துவ கவனம் செலுத்திட தனி பிரிவையும் துன் மகாதீர் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.