NATIONAL

100 நாட்களுக்குள் பாக்காத்தான் அரசாங்கம் ஜிஎஸ்டியை அகற்றியது

16 மே 2018, 9:49 AM
100 நாட்களுக்குள் பாக்காத்தான் அரசாங்கம் ஜிஎஸ்டியை அகற்றியது

ஷா ஆலம், மே 16:

எதிர் வரும் ஜூன் 1-இல் இருந்து பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. தமது அறிக்கையில் நிதி அமைச்சு, எல்லா பதிவு பெற்ற வணிகர்களும் இந்த ஆணையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

"  இதனிடையே, எல்லா பதிவு பெற்ற வணிகர்களும் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வரி ரசீது வெளியிடுவது மற்றும் வரி அறிக்கை போன்றவை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்," என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கொள்கை அறிக்கையில் 100 நாட்களில் ஜிஎஸ்டி அகற்றப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.